பாரதியாரின் பேத்தி மறைவு..! ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல்..!

மகாகவி பாரதியாரின் பேத்தி லலிதா மறைவுக்கு ஆளுநர் இரங்கல். 

மகாகவி பாரதியாரின் பேத்தி லலிதா(94). இவர் பாரதியாரை போன்று தமிழில் மிகவும் புலமை பெற்றவர். பல நூல்களை எழுதிய இவர் இன்று காலை வயது முதிர்வு காரணமாக காலமானார். இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள், ‘மகாகவி பாரதியாரின் பேத்தி திருமதி.லலிதா பாரதி அவர்கள் , ஒரு சிறந்த பாடகி மற்றும் அர்ப்பணிப்புள்ள இசை ஆசிரியரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆளுநர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து உள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment