#IPL2020: சென்னை அணிக்கு 170 ரன்களை இலக்காக நிர்ணயித்த பெங்களூரு..!

இன்றைய 25-வது போட்டியில் சென்னை Vs பெங்களூர் அணிகள் மோதி வருகிறது. இப்போட்டி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

பெங்களூர் அணியில் தொடக்க வீரர்களாக ஆரோன் பிஞ்ச், படிக்கல் இருவரும் இறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே பிஞ்ச் 2 ரன்னில் வெளியேற பின்னர், கோலி களமிறங்கினர். நிதானமாக விளையாடிய படிக்கல் 33 ரன் எடுத்து விக்கெட்டை இழந்தார்.  படிக்கல்லை தொடந்து வந்த வேகத்தில் டிவில்லியர்ஸ் ரன் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

பின்னர், களம் கண்ட வாஷிங்டன் சுந்தர் சொற்ப ரன்களில் வெளியேறினார். ஆட்டம் தொடக்கத்திலே இருந்து நிதானமாகவும், அதிரடியாகவும் விளையாடிய கோலி அரைசதம் அடித்து 90* ரன்கள் குவித்தார். இறுதியாக பெங்களூர் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்து 169 ரன்கள் எடுத்தனர். சென்னை அணி 170 ரன்கள் இலக்குடன் களமிறங்க உள்ளது.

 

author avatar
murugan