இந்த மாவட்டத்தில் பெட்ரோல், டீசலை கேனில் வாங்க தடை…! ஆட்சியர் அதிரடி உத்தரவு…!

திருவாரூர் மாவட்டத்தில் பெட்ரோல், டீசலை கேன்கள் அல்லது பாட்டில்களில் கொடுக்க கூடாது என பெட்ரோல் பங்குகளுக்கு அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவு. 

வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் போட்டாலும், அவசரமான சூழலில் அல்லது பெட்ரோல், டீசல் முடிந்த நிலையில் வாகனங்கள் இயக்க இயலாத சூழலில் பாட்டிகல், கேன்களில் பெட்ரோல், டீசலை வாங்குவதுண்டு.

இந்த நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் பெட்ரோல், டீசலை கேன்கள் அல்லது பாட்டில்களில் வாங்க கூடாது அம்மாவட்ட ஆட்சியர்  குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார். பெட்ரோல், டீசலை கெக்கலில் கொடுக்க கூடாது என பெட்ரோல் பங்குகளுக்கு அறிவுறுத்தி உள்ளார். அதன்படி, பெட்ரோல், டீசலை கேன்களில் எடுத்து வருகிறார்களா என போலீசார் சோதனை சாவடியில் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment