பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது! 800 காளைகள் மற்றும் 651 காளையர்கள் பங்கேற்பு!

பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிற நிலையில், ஜல்லிக்கட்டு போட்டியில்  800 காளைகள் பங்கேற்க உள்ளன. மேலும் 651 மாடுபிடி வீரர்களும் பங்கேற்கின்றனர்.

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியானது, பொங்கலையொட்டி பல இடங்களில் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் நேற்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி மற்றும் உதயநிதி ஸ்டாலின் போன்ற பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் தற்போது பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டியானது தொடங்கி நடைபெறுகிறது. காலை 8 மணிக்கு இந்த போட்டி தொடங்கிய நிலையில், ஜல்லிக்கட்டு போட்டியில்  800 காளைகள் பங்கேற்க உள்ளன. மேலும் 651 மாடுபிடி வீரர்களும் பங்கேற்கின்றனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.