பாலாஜி அவர்களின் மறைவு மிகுந்த வருத்தம் அளிக்கிறது- கார்த்தி..!

விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகும் கலக்கப்போவது யாரு, அதுஇதுஎது போன்ற நகைச்சுவை நிகழ்ச்சியில் நடித்து பிரபலமான நடிகர் வடிவேல் பாலாஜி.  கடந்த 15 நாட்களுக்கு முன்பு திடீரென்று இவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், சென்னை அமைந்தகரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த நிலையில், பொதியளவிலான பணவசதி இல்லாத காரணத்தினால், அங்கிருந்து வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றபட்டு, சிகிச்சை பெற்று வந்துள்ளார். அதன்பின், ஓமந்தூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றபட்டுள்ளார்.

அங்கே கொரோனா நோயாளிகள் அதிகளவில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு நேற்று காலை மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிழந்தார், இன்று அவரின் இறுதி சடங்கு அவருடைய வீட்டில் வைத்து நடைபெறுகிறது, இந்நிலையில் இவரின் மறைவிற்கு பலர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர் அந்த வகையில் நடிகர் கார்த்தி தனது ட்வீட்டர் பக்கத்தில் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

அதில் நடிகர் கார்த்தி கூறியது நடிகர் வடிவேல் பாலாஜி அவர்களின் மறைவு மிகுந்த வருத்தம் அளிக்கிறது. அவர் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என்று பதிவு செய்துள்ளார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.