கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் குறைதீர் கூட்டத்தை பார்வையிட்ட இயக்குனர் பாலா…!!!

  • புதிய படத்தை இயக்கும் இயக்குனர் பாலா.
  • ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் திங்கள் கிழமை தோறும் நடைபெறும் குறைதீர்ப்பு கூட்டத்தை இயக்குனர் பாலா பார்வையிட்டார்.

இயக்குனர் பாலா சமீபத்தில் வர்மா படத்தை இயக்கவிருந்தார். இந்நிலையில் அந்த படத்தில் சில சிக்கல்கள் ஏற்பட்டு, அந்த படம் தடைபட்டதை தொடர்ந்து, இவர் ஓர் புதிய படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது.

இந்நிலையில், இந்த படத்தில்,  மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் தொடர்பான காட்சிள் இடம் பெறுகின்றன. இதனையடுத்து,  ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் திங்கள் கிழமை தோறும் நடைபெறும் குறைதீர்ப்பு கூட்டத்தை இயக்குனர் பாலா பார்வையிட்டார். மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பது. அதிகாரிகள் பதிலளிப்பது போன்றவற்றை கண்காணித்து விட்டு சென்றுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment