‘இனிமேல் குடிக்க மாட்டேன்’ என பிரமாண பாத்திரம் தாக்கல் செய்தால் ஜாமீன் – மதுரை உயர்நீதிமன்ற கிளை

‘இனிமேல் குடிக்க மாட்டேன்’ என பிரமாண பாத்திரம் தாக்கல் செய்தால் ஜாமீன்.

திருச்சியை சேர்ந்த சிவா, கார்த்திக் இருவரும், உயர்நீதிமன்ற மதுரை கிளையில், ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில், ‘கடந்த ஜூலை 25 ஆம் தேதி நண்பர்கள் சுரேஷ், பாண்டியன் உள்ளிட்டோர் உடன் இணைந்து மது அருந்திய போது வாய் தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து பீர் பாட்டிலால் சுரேசை தாக்கியதாக எங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கானது பொய்யாக பதிவு செய்யப்பட்டதாகவும், கணக்கு காண்பிக்கும் நோக்கி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர் என்றும், 30 நாட்களுக்கும் மேலாக சிறையில் இருக்கும் நிலையில் கீழமை நீதிமன்றத்தில் ஜாமீன் கோரிய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. எனவே, நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டு நடக்கிறோம். இந்த வழக்கில் எங்களுக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்து இருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புகழேந்தி மது அருந்தியதால் தான், இந்த பிரச்சனை ஏற்பட்டுள்ளது. எனவே மனுதாரர்கள் இருவரும் இனிமேல் குடிக்க மாட்டோம் என பிரமாண பத்திரம் தாக்கல் செய்தால் ஜாமீன் வழங்குவதாக கூறி இந்த வழக்கை திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.