தமிழ்நாட்டிற்கு சிறந்த மாநிலத்திற்கான விருது….! அமைச்சர் விஜயபாஸ்கர் பெருமிதம்….!!!

தமிழ்நாட்டிற்கு சிறந்த மாநிலத்திற்கான விருது கிடைத்ததை எண்ணி பெருமிதம் கொள்வதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

இன்று புதுடில்லியில் இந்திய அளவிலலான ஆரோக்ய பாரத பயண நிறைவு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில்,  “தமிழ்நாட்டிற்கு சிறந்த மாநிலத்திற்கான விருது” வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதினை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள், மாண்புமிகு மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் திரு.அஸ்வினி குமார் சௌபே அவர்களிடமிருந்து பெற்றுள்ளார்.

இது குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் கூறுகையில், மாண்புமிகு மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் திரு.அஸ்வினி குமார் சௌபே அவர்களிடமிருந்து, இந்த விருதினை பெற்றுக்கொண்டதை எண்ணி பெருமகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment