அவனியாபுரம் ஜல்லிக்கட்டு அன்று எந்த சமூகத்திற்கோ, காளைக்கோ முதல் மரியாதை வழங்கப்படக் கூடாது.
திண்டுக்கல், தேனி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய 6 மாவட்டங்களில் வரும் 15 முதல் 31 ஆம் தேதி வரை ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கி தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில், அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் யாருக்கும் பேனர்கள் வைக்கக்கூடாது. விழா கமிட்டியினர் யாருக்கும் முதல் மரியாதை கூடாது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டை நிபந்தனைகளுடன் நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுவிட்டுள்ளது.