டி-20 உலகக்கோப்பை தொடரில் இலங்கைக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ஆஸ்திரேலியா.
ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரில் தகுதிச்சுற்றுப்போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் சூப்பர்-12 போட்டிகள் நடைபெற்று வருகிறது. பெர்த்தில் இன்று நடைபெறும் போட்டியில் இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடியது.
டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பௌலிங்கை தேர்வு செய்தது, இதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்தது.அதிகபட்சமாக பதும் நிசங்கா 40 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார்.
ஆஸ்திரேலிய அணி, தனது முதல் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக தோல்வியடைந்து, இன்றைய போட்டியில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் விளையாடியது.
158 ரன்கள் வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.ஆஸ்திரேலிய அணியில் மார்கஸ் ஸ்டோனிஸ் அதிகபட்சமாக 59 ரன்களை எடுத்தார்.