மாணவர்கள் கவனத்திற்கு..! இன்று பள்ளிகள் இயங்கும்..!

கடந்த 9-ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டதை ஈடு செய்ய இன்று சென்னையில் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாண்டஸ் புயல் காரணமாக பெய்த மழையின் காரணமாக சென்னையில் பள்ளிகளுக்கு அவ்வப்போது விடுமுறைகள் அளிக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது இதனை ஈடு செய்ய சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி கடந்த 9-ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டதை ஈடு செய்ய இன்று சென்னையில் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை பாட திட்டத்தை பின்பற்றி பாடத்திட்டங்கள் நடைபெறும் எனவும் சென்னை முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment