ஜம்மு-காஷ்மீரில் தாக்குதல் ! பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள்  3 பேர் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது.இந்தியாவிலும் இதன் தாக்கம் அதிகம் இருந்து வரும் நிலையில் ஜம்மு காஷ்மீரை ஒட்டியுள்ள பகுதிகளில் தொடர்ந்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.இதற்கு  இந்திய பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில்  ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் உள்ள  கோரிபோரா பகுதியில்  பயங்கரவாதிகளுக்கும்,பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் நடைபெற்றது.இந்த மோதலில்,3   பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். மேலும் அந்த பகுதியில் பாதுகாப்பு படையினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில்  ஈடுபட்டு வருகின்றனர்.