விழாவிற்கு அமைச்சர் தாமதம்.! காத்திருந்து மீண்டும் அலுவலகத்திற்கு புறப்பட்ட முதல்வர் ரங்கசாமி.!

அரசு நிகழ்வில், அமைச்சர் வருகை தாமதமானதால் காத்திருந்த முதல்வர் ரங்கசாமி மீண்டும் அலுவலகத்திற்கு புறப்பட்டார். 

புதுச்சேரி அரசு சார்பில் அரசு சட்ட கல்லூரிக்கு புதிய பேருந்து வாங்கப்பட்டது. அதனை கல்லூரிக்கு அர்ப்பணிக்கும் நிகழ்வு இன்று புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் நடைபெற்றது.

அந்த நிகழ்வுக்கு முதலமைச்சர் ரங்கசாமி சட்டபேரவை வளாகத்திற்கு  வெளியே வந்தார். ஆனால், அந்த சமயம் அமைச்சர் நமச்சிவாயம் வருகை தாமதமானது. இதனால், நிகழ்ச்சி தொடங்க காத்திருந்த முதல்வர் ரங்கசாமி திடீரென மீண்டும் அலுவலகத்திற்குள் சென்றார்.

அதன் பின்னர் அமைச்சர்கள் அதிகாரிகள் அழைத்து வந்தனர். அதன் பின்னர் அந்த திட்டத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதல்வர் ரங்கசாமி.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment