ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் 2023 ஆம் ஆண்டுக்கு ஒத்திவைப்பு..!!

இந்த ஆண்டு நடைபெறவிருந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வருகின்ற  2023-ம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் அதிகரித்து வருவதால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கிரிக்கெட் வீரர்கள் சிலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வந்த காரணமாக நடப்பாண்டு ஐபிஎல் தொடர் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இதனை தொடர்ந்து கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறவிருந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வருகின்ற  2023-ம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை அணிகள் அதிகமான போட்டிகளில் விளையாட இருப்பதாலும், போட்டி அட்டவணையை தயார் செய்வதில் சிக்கல் ஏற்பட்டதாலும், ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.