ஒரு மனிதனாக நான் கூட தவறுகள் இழைக்கக் கூடியவனே – பிரதமர் மோடி

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அக்.7-ம் தேதி, ஜனநாயக ரீதியாக, அரசின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு, 19 ஆண்டுகள் நிறைவு பெற்று, 20-வது ஆண்டிற்குள் அடியெடுத்து வைக்கிறார். இதனையடுத்து, அரசியல் பிரபாலங்கள் பலரும், தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, தனது ட்வீட்டர் பக்கத்தில், இந்தி மொழியில் சில கருத்துக்களை பதிவிட்டுள்ளார். அந்த வகையில், எனக்கு நாட்டு நலனும் ஏழைகளின் நலனுமே முக்கியம் என்பதை நாட்டு மக்களுக்கு மீண்டும் உறுதிபட கூற விரும்புகிறேன் என்றும், எந்த ஒரு நபரும் தன்னிடம் குறைபாடுகள் இல்லை என்று கூறிக்கொள்ள முடியாது. நீண்ட காலமாக முக்கியமான, பொறுப்புள்ள பதவிகளில் நான் இருந்து கொண்டிருக்கிறேன், ஒரு மனிதனாக நான் கூட தவறுகள் இழைக்கக் கூடியவனே என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், என்னிடம் உள்ள குறைபாடுகளையும் மீறி என் மீதான மக்களின் நேயம் அதிகரித்து வருவது என் நல்லதிர்ஷ்டமே என்றும், உங்களது ஆசிகளும், அன்பும் நாட்டுக்கு சேவை செய்யும், ஏழைகளின் நலம் காக்கும், இந்தியாவை புதிய உயரங்களுக்கு இட்டுச் செல்லும் உறுதிப்பாட்டை வலுவாக்குகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.