யூசிஜி மற்றும் நீதிமன்ற வழிகாட்டுதல் படி அரியர் தேர்ச்சி – அமைச்சர் ஆர்.பி உதயகுமார்!

அரியர் மாணவர்களின் தேர்ச்சி குறித்த அறிவிப்பு யூசிஜி மற்றும் நீதிமன்ற வழிகாட்டுதல் படி எடுக்கப்படும் என வருவாய்த் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.

மதுரை விவசாயக் கல்லூரியில் நடைபெற்ற விவசாயிகள் மற்றும் கிராம அளவிலான அலுவலர்களுக்கும் வறட்சி மற்றும் பேரிடர் மேலாண்மை குறித்த திறன் மேம்பாட்டு பயிற்சியில் கலந்துகொண்ட வருவாய்த் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் அவர்கள் முன்னதாக செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அவர் பேசுகையில் எட்டு மாதங்களில் தேர்தல் வருகிறது, மக்கள் வாக்களிப்பார்கள் ஆனால் அதிமுகவிற்கு ஆதரவாக தீர்ப்பு வழங்குவார்கள் என கூறினார். மேலும் அரியர் மாணவர்கள் தேர்ச்சி அறிவிப்பு குறித்து யூசிஜி மற்றும் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

author avatar
Rebekal