250 ஆண்டுகால பிரிடிஷ் ஆட்சியை விட மோடி அரசு அதிகமாக கொள்ளையடித்துள்ளது.! கெஜ்ரிவால் கடும் குற்றசாட்டு.! 

பிரிட்டிஷ் அரசை விட அதிக அளவு கொள்ளையை பாஜக அரசு செய்துள்ளது என அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சித்துள்ளார். 

நேற்று சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சி தலைவரும், டெல்லி மாநில முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கலந்துகொண்டு பேசினார். அப்போது பாஜக அரசு பற்றியும் காங்கிரஸ் பற்றியும் தனது விமர்சனத்தை முன்வைத்தார்.

அப்போது பேசுகையில், இந்தியாவில் 250 ஆண்டுகளாக பிரிட்டிஷ் அரசு அடித்த கொள்ளையை விட  கடந்த 9 ஆண்டுகளில் பிரதமர் மோடியின் கீழான பாஜக அரசு அதிக அளவு கொள்ளையை அடித்துள்ளது . அதே போல காங்கிரஸ் கட்சியும் கடந்த 75 ஆண்டுகளாக இந்தியாவில் கொள்ளை அடித்துளளது. அத்தியாவசிய பொருட்களான பால் உள்ளிட்ட  உணவு பொருட்களுக்கு பிரிட்டிஷ் அரசு கூட வரி விதித்ததில்லை. ஆனால் பாஜக அரசு அதற்கும் வரி விதித்து விட்டது என பாஜக அரசு பற்றி பல்வேறு விமர்சனங்களை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.