திடீர் திருப்பம்! டெல்லியில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார் அரவிந்த் கெஜ்ரிவால்!

டெல்லி சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால். டெல்லியில் இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில், தனது அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்தார். மொத்தமுள்ள 70 இடங்களில் ஆம் ஆத்மி கட்சிக்கு 62 எம்எல்ஏக்கள் இருக்கும் பட்சத்திலும், சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

அதன்படி, டெல்லி சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் மீது நாளை விவாதம் நடைபெற உள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை தாக்கல் செய்துவிட்டு, அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது, பொய் வழக்குகள் பதிவு செய்து மற்ற மாநிலங்களில் கட்சிகள் உடைவதையும், அரசுகள் கவிழ்வதையும் பார்க்கிறோம். அதுபோன்று, டெல்லியில் ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களை மதுபான கொள்கை வழக்கில் கைது செய்ய நினைக்கிறார்கள்.

ரூ.84,560 கோடி ராணுவபொருள் கொள்முதல் செய்ய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்..!

டெல்லி தேர்தலில் வெற்றி பெறவே முடியாது என்று தெரிந்ததால் டெல்லி அரசை கவிழ்க்க நினைக்கிறார்கள். எங்கள் எம்.எல்.ஏ.க்கள் யாரும் பிரிந்து செல்லவில்லை, அவர்கள் அனைவரும் அப்படியே இருக்கிறார்கள் என்பதை மக்களுக்கு தெரியப்படுத்த, நான் நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை முன்வைக்கிறேன் என்றுள்ளார்.

இதனிடையே, ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை பாஜக விலைக்கு வாங்குவதாக புகார் எழுந்த நிலையில், தற்போது நம்பிக்கை வாக்கெடுப்பு கோரியிருப்பது அரசியல் திருப்பமாக பார்க்கப்படுகிறது. தங்கள் எம்எல்ஏக்களுக்கு தலைக்கு ரூ.25 கோடி வரை பாஜக விலை பேசி வருவதாகவும், ஆம் ஆத்மி அரசை கலைக்க பாஜக திட்டமிட்டுள்ளதாகவும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்து குற்றச்சாட்டை முன்வைத்து வந்தார்.

இந்த சூழலில் டெல்லி அரசியலில் திடீர் திருப்பமாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பை சட்டப்பேரவையில் கோரியுள்ளார். இதன் மீதான விவாதம் நாளை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மதுபான கொள்கை தொடர்பான வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வரும் 19ம் தேதி ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment