#ArtificialWomb: ஆண்டுக்கு 30,000 குழந்தைகள்! புதிய முயற்சியில் ஆராய்ச்சியாளர்கள்! வீடியோ உள்ளே..

செயற்கையான கருப்பை வசதியை உருவாக்கும் முயற்சியில் உலக ஆராய்ச்சியாளர்கள் தீவிரம்.

செயற்கை கருப்பை வசதி மூலம் ஆண்டுக்கு 30,000 குழந்தைகள் வரை உருவாக்கும் முயற்சியில் ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதாவது, தாயின் வயிற்றில் வளரும் சிசுவை, தனியாக வெளியே வைத்து வளர்க்கும் வகையில் செயற்கையான கருப்பையை உருவாக்கும் முயற்சியில் உலக ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு வருகின்றன. இதுதொடர்பான ஆராய்ச்சியின் மாதிரி வீடியோவை எக்டோலைஃப் (Ecto Life) என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த ஆராய்ச்சி சாத்தியப்படும் பட்சத்தில் செயற்கை கருப்பை வசதி மூலம் ஆண்டுக்கு 30,000 குழந்தைகள் வரை உருவாக்க முடியும் என கணிக்கப்பட்டுள்ளது. ஒரு செயற்கை கருப்பை என்பது ஒரு கருவியாகும், இது சாதாரணமாக கருவை சுமந்து செல்லும் ஒரு நபரின் உடலுக்கு வெளியே கருவை வளர்ப்பதன் மூலம் வெளிப்புற கர்ப்பத்தை அனுமதிக்கும்.

இந்த செயர்கை கருப்பை வசதி உலகெங்கிலும் உள்ள ஆராய்ச்சியாளர்களால் நடத்தப்பட்ட 50 ஆண்டுகளுக்கும் மேலான அற்புதமான அறிவியல் ஆராய்ச்சியை அடிப்படையாகக் கொண்டது. ஆராய்ச்சியாளர்களின் இந்த முயற்சி வெற்றி பெற்று விட்டால் உலகின் முதல் செயற்கை கருப்பை வசதி இதுவாகும்.

இதுபோன்ற விஷயங்களை திரைப்படங்களில் நீங்கள் பார்த்திருக்கலாம். ஆனால், தற்போது யூடியூப்பில் பகிரப்பட்ட இந்த புதிய கான்செப்ட் வீடியோவில் அதுதான் காட்டப்படுகிறது. பெர்லினை தளமாகக் கொண்ட உயிரித் தொழில்நுட்பவியலாளர் மற்றும் அறிவியலாளரான ஹஷேம் அல்-கைலி இந்த கருத்தை உருவாக்கியுள்ளார்.

இந்த வசதி (இது எப்போதாவது நடைமுறைக்கு வந்தால்) ‘infertile couples’ ஒரு குழந்தையை கருத்தரிக்க மற்றும் உண்மையான உயிரியல் பெற்றோராக மாற்ற அனுமதிக்கும் என்று ஹஷேம் அல்-கைலி தெரிவித்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment