பொடுகு தொல்லையால் அவதிப்படுகிறீர்க்ளா? அப்ப இதை ஃபாலோ பண்ணுங்க!

பொடுகு தொல்லையில் இருந்து விடுபட டிப்ஸ்.

இன்றைய இளம் தலைமுறையினர், தங்களை அழகுபடுத்துவதற்காக அதிகமான பணத்தை செலவு செய்கின்றனர். இதற்காக அதிகமான பணத்தை செலவு செய்து, கடைகளில்  கெமிக்கல் கலந்த கிரீம்களை வாங்கி உபயோகிப்பதன் மூலம், பாலா  விளைவுகள் ஏற்பாடாகி கூடும்.

அந்த வகையில் பொடுகு மறைவதற்காக கெமிக்கல் கலந்த மருந்துகளை உபயோகிக்கும் போது, தலை முடி உதிர்தல், நுனி வெடித்தல் போன்ற பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.

தற்போது இந்த பதிவில் பொடுகு மறைய இயற்கையான முறையில் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம்.

மரிக்கொழுந்து

ஒரு கப் மரிக்கொழுந்துடன், அரை கப் வெந்தயக் கீரையை அரைத்து, தலைக்கு பேக் போட்டு, 10 நிமிடம் கழித்து தலையை நன்கு  அலசினால், பொடுகு மறைந்து விடும்.

பசலை கீரை

பசலை கீரையை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால், பொடுகு தொல்லை நீங்கி விடும்.

அருகம்புல்சாறு

அருகம்புல் சாற்றை எடுத்து, தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து காய்ச்சி ஆறவைத்து, தினசரி அதனை தலையில் தேய்த்து வந்தால் பொடுகு மறையும்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.