#BREAKING: தமிழில் அர்ச்சனை- உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கேவியட் மனு தாக்கல்..!

தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் கோயில்களில் “அன்னைத் தமிழ் அா்ச்சனைத் திட்டம்” என்ற பெயரில் தமிழில் அா்ச்சனை செய்யும் திட்டத்தை தமிழ அரசு அறிமுகப்படுத்தி மாநிலம் முழுவதும் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதிக்க மறுப்பு தெரிவித்து இருந்தது. இதனால், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து யாரேனும் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு இருப்பதால் தமிழக அரசு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.

தங்களது தரப்பு விளக்கத்தை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கக் கூடாது என்பதை வலியுறுத்த கேவியட் மனு தாக்கல் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan