ஒரே நாளில் தேர்தல் ஆணையர் நியமனம் – உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி

தலைமை தேர்தல் ஆணையராக அருண் கோயலை நியமித்தது குறித்த விவரங்களை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது மத்திய அரசு.

தலைமை தேர்தல் ஆணையர் அருண் கோயல் நியமனம் ஏன் அவசர அவசரமாக நடைபெற்றது என உச்சநீதிமன்ற கேள்வி எழுப்பியுள்ளது. புதிய தேர்தல் ஆணையராக 24 மணி நேரத்தில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அருண் கோயலை எப்படி நியமித்தீர்கள் என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். அருண் கோயலை நியமித்தது குறித்த விவரங்களை உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்தது.

இதனைத்தொடர்ந்து தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பான வழக்கில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது.  மே மாதத்தில் காலியாக இருந்த தேர்தல் ஆணையர் பதவி நவ.17-ல் உச்சநீதிமன்றம் வழக்கை விசாரிக்க தொடங்கிய பிறகு நியமனம் செய்யப்பட்டுள்ளது.

18-ஆம் தேதி வழக்கை விசாரிக்க இருந்த நிலையில், அதே நாளில் தலைமை தேர்தல் ஆணையர் பதவிக்கு அருண் கோயல் பெயரை பிரதமர் மோடி பரிந்துரை செய்துள்ளார். மே 15 முதல் நவம்பர் 18 வரை ஆணையர் பதவி காலியாக இருந்த நிலையில், அதுவரை என்ன செய்தீர்கள் என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், 4 அதிகாரிகளில் அருண் கோயலை தேர்வு செய்தது எப்படி என்பது குறித்து அரசு வழக்கறிஞர் விளக்க வேண்டும் எனவும் நீதிபதி ஜோசப் தெரிவித்தார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment