26ஆம் தேதி முதல் கல்லூரில் சேர்க்கைக்கான விண்ணப்பம் – அமைச்சர் பொன்முடி அறிவிப்பு!

வரும் 26ம் தேதி முதல் கல்லூரி சேர்க்கைக்கான விண்ணப்பம் விநியோகம் செய்யப்படும் என அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் பொறியியல் மற்றும் அரசுக் கலைக் கல்லூரிகளில் சேர ஜூலை 26ம் தேதி முதல் ஆகஸ்ட் 24ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்து அறிவித்துள்ளார்.விண்ணப்பம் வழங்குவதற்கான ஏற்பாடு அனைத்து கல்லூரிகளிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.

இதனிடைய, மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயின்ற பிளஸ் 2 மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்ட நிலையில், கல்லூரி சேர்க்கை குறித்து உயர்கல்வி அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடப்படுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்