ரியா சக்ரபொர்த்தியை கைது செய்ய சதி வலை.! – வழக்கறிஞர் குற்றசாட்டு.!

ரியா சக்ரபொர்த்தி கைது செய்ய சதி வலை பின்னப்படுகிறது. ஒருவரை காதலித்தது குற்றமென்றால் அதற்கான விளைவுகளை ரியா எதிர்கொள்வாள். இதற்காக ரியா எந்த ஒரு நீதிமன்றத்திலும் முன் ஜாமீன் பெறவில்லை. – ரியாவின் வழக்கறிஞர்.

பாலிவுட் நடிக சுஷாந்த் சிங் ராஜ்புட் மரணத்தை தொடர்பான வழக்கு விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணையில் சுஷாந்த் சிங்கின் காதலி ரியா சக்ரபொர்த்தியிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.

இது தொடர்பாக ரியாவின் வழக்கறிஞர் குறிப்பிடுகையில், ‘ ரியா சக்ரபொர்த்தி கைது செய்ய சதி வலை பின்னப்படுகிறது. ஒருவரை காதலித்தது குற்றமென்றால் அதற்கான விளைவுகளை ரியா எதிர்கொள்வாள். இதற்காக ரியா எந்த ஒரு நீதிமன்றத்திலும் முன் ஜாமீன் பெறவில்லை.

இதற்கு முன்னர் இந்த மரண வழக்கு தொடர்பாக ரியா சக்ரபொர்த்தியின் சகோதரர்  சோவிக் சக்ரபொர்த்தி மற்றும்  சுஷாந்தின் வீட்டு மேலாளர் சாமுவேல் மிராண்டா ஆகியோரை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்து செப்டம்பர் 9 வரையில் நீதிமன்ற காவலில் வைத்துள்ளனர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.