அண்ணா பல்கலைக்கழகம் நடிகர் அஜித்துக்கு கோரிக்கை….!! நடந்தது என்ன?

நடிகர் அஜித் அவர்கள் தமிழ் சினிமாவில் மிகப் பெரிய இடத்தில் உள்ளார். அவர் நடித்துள்ள அனைத்து படங்களும் மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பையும், பாராட்டுக்களையும் பெற்றுள்ளார். இவர் சமீபத்தில் நடித்த விசுவாசம் படம் மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், நடிகர் அஜித் குமார் சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் தலைமை ஹெலிகாப்டர் பயிற்சியாளராகவும், ஆலோசகராகவும் பதவி வகித்து வந்தார். இவர் தலைமையில் இயங்கிய தக்சா குழு பல்வேறு வெற்றிகளை குவித்திருந்தது.

இந்நிலையில், தற்போது அஜித்தின் பணி நிறைவு பெற்றுள்ளதாக அண்ணா பல்களைக்கழகம் அறிவித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் நடிகர் அஜித்துக்கு நன்றி தெரிவித்துள்ளது. இதனையடுத்து, நடிகர் அஜித்துக்கு விருப்பப்பட்டால், அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆலோசகர் பணியில் மீண்டும் பணியாற்றலாம் என அண்ணா பல்கலைக்கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment