நாளை OTT-இல் வெளியாகிறது ‘அனிமல்’ திரைப்படம்.!

ரன்பீர் சிங், ராஷ்மிகா மந்தனா நடித்த ‘அனிமல்’ திரைப்படம், நாளை குடியரசு தினத்தை முன்னிட்டு நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ளது.

தெலுங்கு இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர், ரஷ்மிகா நடித்த ‘அனிமல்’ படத்தில் வரும் நிறைய ஆக்ஷன் காட்சிகள், காதல் காட்சிகளை கொண்டுள்ளதாக கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், வசூல் ரீதியாக தூள் கிளப்பி வருகிறது.

டிசம்பர் 1ஆம் தேதி வெளியான அதிரடி ஆக்ஷன் காட்சிகளால் உருவான இப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று, இப்படம், இதுவரை ரூ. 900 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இந்த படத்தை டி-சீரிஸ் பிலிம்ஸ், பத்ரகாளி பிக்சர்ஸ் மற்றும் சினி1 ஸ்டுடியோஸ் ஆகியவற்றின் கீழ் பூஷன் குமார், கிரிஷன் குமார், முராத் கெடானி மற்றும் பிரனய் ரெட்டி வங்கா ஆகியோர் தயாரித்துள்ளனர்.

மேலும்  இதில், ரன்பீர் கபூர், அனில் கபூர், ராஷ்மிகா மந்தனா, ட்ரிப்டி டிம்ரி மற்றும் பாபி தியோல் ஆகியோர் நடித்துள்ளனர். இதற்கிடையில், எதிர்பார்த்ததை விட டபுள் வெற்றியை தந்துள்ள அனிமல் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க படக்குழு முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

அந்த காட்சியில் நடிக்கும் போது கண் கலங்கி அழுதேன் – ராஷ்மிகா மந்தனா வேதனை!

தற்பொழுது, இப்படம் திரயரங்குகளில் வெற்றிகரமாகா ஓடிய நிலையில், நாளை குடியரசு தினத்தை முன்னிட்டு, பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ் ஓடிடி-யில் வெளியாகிறது. சென்சார் போர்டில் நீக்கப்பட்ட 8 நிமிட காட்சிகளும், OTT-இல் வெளியாகும் பதிப்பில் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.