ரத்தன் டாடாவுக்கு பாரத் ரத்னா விருது வழங்க வேண்டும்.! குடியசு தலைவருக்கு கடிதம் எழுதிய ஆந்திர எம்பி.!

ரத்தன் டாடாவுக்கு பாரத் ரத்னா வழங்க வேண்டும் என ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் எம்பி கே.ரகு ராம கிருஷ்ண ராஜு பரிந்துரை கடிதம் எழுதியுள்ளார். 

ஆந்திர மாநில ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி எம்.பி கே.ரகு ராம கிருஷ்ண ராஜு என்பவர் கடந்த புதன்கிழமை குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் பிரபல தொழிலதிபரும் டாடா குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடாவுக்கு பாரத ரத்னா வழங்கக் கோரி அந்த கடிதத்தில்  எம்பி கே.ரகு ராம கிருஷ்ண ராஜு ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மேலும். ‘ இந்த பூமியில் பல கோடீஸ்வரர்கள் பிறப்பார்கள் ஆனால், ரத்தன் டாடா போல நிரந்தரமான தாக்கத்தை ஏற்படுத்துபவர்கள் ஒரு சிலர் தான். ‘ என ராஜு கூறினார். நேற்று ரத்தன் டாடா தனது 85வது பிறந்தநாளை கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment