கோவில் ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது எனவும், தேவாலயங்கள் பழுதுபார்க்க நிதி ஒதுக்கீடு அதிகரிப்பு. – நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு.
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த பட்ஜெட் கூட்ட தொடரில் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 2023-2024 க்கான பட்ஜெட் உரையை வாசித்து வருகிறார்.
பட்ஜெட் திட்டங்கள் :
இதில், மாற்று திறனாளிகளுக்கு ஓய்வூதிய திட்டம், காலை உணவு திட்டம் , சென்னையில் சர்வதேச விளையாட்டு மையம், மகளிர் சுயஉதவி குழுக்கள் கடன் உதவி, பெண் தொழில் முனைவோருக்கு சிறப்பு திட்டம், ராணுவ வீர்களுக்கான இழப்பீடு தொகை அதிகரிப்பு என பல்வேறு திட்டங்களையும், அதற்கான நிதி ஒதுக்கீட்டையும் நிதியமைச்சர் அறிவித்து வருகிறார்.
கோவில் சொத்துக்கள் :
சென்னையை தொடர்ந்து, கோவை, மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் என பல்வேறு திட்டங்களை முதல்வர் அறிவித்தார். அதேபோல, கோவில் சொத்துக்கள் மீட்கப்பட்டது குறித்தும், தேவாலயங்கள் பற்றியும் முக்கிய அறிவிப்புகளை அறிவித்தார்.
தேவாலயங்கள் சீரமைப்பு :
அதில், திமுக ஆட்சிக்கு வந்தபிறகு பல்வேறு கோவில் பகுதிகளில் 4,400 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கோயில் சொத்துக்கள் அனைத்தும் மீட்கப்பட்டுள்ளன எனவும், கிருஸ்தவ தேவாலயங்களை பழுதுபார்க்க வழங்கப்படும் மானியமானது 10 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது எனவும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.