அசாமில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதி வழங்கிய நடிகர் அமிதாப்பச்சன்!

அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களிலும், பீகாரிலும் கடந்த வாரம் பலத்த மலை பெய்தது. இதனால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கில் அசாமில் 64 பெரும், பீகாரில் 102 பெரும் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில், இந்த மக்களின் நிலையை அறிந்த பலரும் இவர்களுக்கு உதவிக்கு கரம் நீட்டி வருகின்றனர். நடிகர் அமிதாப்பச்சன் அசாம் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.51 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். இதனையடுத்து அசாம் முதலமைச்சர் அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும், நடிகர் அக்சய் குமார் அசாம் வெள்ளத்துக்கு ரூ.1 கோடி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.