வழிபாட்டுத்தளங்களை திறக்க மத்திய அரசு அனுமதி !

இந்தியாவில் சில தளர்வுகளுடன் பொதுமுடக்கம் நீட்டிக்கப்படும் நிலையில், வழிபாட்டுத்தளங்களை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

கொரோனா அச்சம் காரணமாக, நாடு முழுவதும் 4 வது ஊரடங்கு அமலில் உள்ளது.  4 ஆம் கட்ட ஊரடங்கு நாளையுடன் முடிவடையும் நிலையில், ஜூன் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்படுகிறது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில், ஜூன் 1 தேதி முதல் 30 தேதி வரை படிப்படியாக தளவுகளுக்கான அளிப்பதற்கு UNLOCK 1.0 என்ற பெயரில் 3 கட்டங்களாக பொதுமுடக்க தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அதில், முதல் கட்டடமாக, ஜூன் 8 தேதி முதல் இந்தியாவில் வழிபாட்டுத்தளங்களை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. 

author avatar
Castro Murugan