குற்றாலத்தில் குளிக்க அனுமதி ..! மகிழ்ச்சியில் சுற்றுலாப்பயணிகள்..!

தமிழகத்தில் வடமேற்கு மழை தீவிரமடைந்ததால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை மற்றும் கனமழை பெய்து வருகிறது. கடந்த மூன்று நாட்களுக்கு மேலாக நெல்லை மற்றும்  தென்காசியில் அதிகமாக மழை பெய்தது.

இதனால் தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள குற்றாலம் , ஐந்தருவி , பழைய குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதைத்தொடர்ந்து கடந்த இரு நாட்களாக அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது.

இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில் தற்போது குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்துள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க காவல்துறை அனுமதி கொடுத்துள்ளது. இன்று காலை முதலே ஐந்து அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு கொடுக்கப்பட்டது. ஆனால் பழைய குற்றால அருவியில் குளிக்க அனுமதி கொடுக்கவில்லை.

author avatar
murugan