அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு 11 பேர் காயம்..! இருவர் கவலைக்கிடம்..!

அமெரிக்காவின் நியு ஆர்லியன்ஸ் நகரில் உள்ள பிரென்ச் பகுதியில் நேற்று அதிகாலை 3.20 மணிக்கு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அங்கு இருந்த பொது மக்கள் மீது துப்பாக்கி  சூடு நடத்தினர்.துப்பாக்கிச்சூடு நடத்திய பிறகு அந்த மர்ம நபர்கள் அங்கு இருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.

இந்த சம்பவத்தில் 11 பேர் படுகாயமடைந்தனர்.  தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த போலீசார்  காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். காயமடைந்தவர்களில் இரண்டு பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக  போலீசார் ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் அங்கு உள்ள சிசிடிவி காட்சியை வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

author avatar
murugan