Categories: இந்தியா

ஒரு முறை அழுத்தினால் பாஜகவுக்கு 2 ஓட்டு.! அரசியல் கட்சியினர் அதிர்ச்சி..!

Election2024: கேரளாவில் மாதிரி வாக்குபதிவின்போது மின்னணு வாக்கு இயந்திரத்தில் ஒருமுறை அழுத்தினால் பாஜகவுக்கு 2 ஒட்டுகள் விழுந்ததாக குற்றசாட்டு எழுந்துள்ளது.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நாளை முதல் தொடங்க உள்ளது. இதில் முதல் கட்டமாக தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்கள் உள்ள 102 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. நாளை தொடங்கும் மக்களவை தேர்தல் ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும்.

அதே போல கேரளாவில், வரும் ஏப்ரல் 22ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குபதிவின் போது மொத்தமுள்ள 20 மக்களவை தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற  உள்ளது. இந்த நிலையில் கேரள மாநிலம் காசர்கோடு தொகுதியில் நேற்று மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை சோதிக்கும் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதில் குறைந்தது நன்கு மின்னணு வாக்கு இயந்திரத்தில் (EVM) பாஜகவுக்கு கூடுதல் வாக்குகள் விழுவதாக கம்யூனிஸ்ட் கூட்டணி கட்சிகள் கூட்டணி (LDF) மற்றும் காங்கிரஸ் கூட்டணி (UDF) வேட்பாளர்களின் முகவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அந்த நான்கு மின்னணு வாக்கு இயந்திரத்தில் பாஜகவின் தாமரை சின்னத்தில் ஒரு முறை அழுத்தினால் 2 ஓட்டுகள் விழுந்ததாக புகார் தெரிவித்துள்ளனர்.

அதாவது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் ஒப்புகை சீட்டு இயந்திரம் ஆகியவற்றை ஒப்பிட்டு பார்க்கும்போது ஒரு வாக்கு பாஜகவுக்கு கூடுதலாக விழுந்திருக்கிறது. இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம் வாக்குப்பதிவு இயந்திரங்களில் உள்ள மற்ற சின்னங்களை விட காங்கிரஸின் ‘கை’ சின்னம் சிறியதாக இருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

எனவே பாஜகவுக்கு கூடுதல் ஓட்டு விழும் விவகாரம் தொடர்பாக காசர்கோடு மக்களவைத் தொகுதியின் எல்.டி.எஃப் வேட்பாளரும், சி.பி.எம் தலைவருமான எம்.வி.பாலகிருஷ்ணன், தேர்தல் அதிகாரியான மாவட்ட ஆட்சியர் இன்பசேகரிடம் புகார் மனு அளித்துள்ளார்.

இதனிடையே, மின்னணு வாக்கு இயந்திரத்தில் நம்பகத்தன்மை இல்லை என்று கூறி மின்னணு வாக்கு இயந்திரத்துடன் இணைந்து விவிபேட் இயந்திரத்தில் உள்ள ஒப்புகைச் சீட்டை 100 சதவிகிதம் எண்ணக் கோரிய வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா , தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கியுள்ள அமர்வு முன்னர் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது.

இன்று மீண்டும் அதுதொடர்பான வழக்கு விசாரணை நடந்தபோது, காசர்கோட்டில் பாஜகவுக்கு கூடுதல் ஓட்டு விழுந்த விவகாரம் குறித்து மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் குற்றச்சாட்டை முன்வைத்தார். இதன்பின் காசர்கோடு விவகாரத்தை விசாரித்து விளக்கம் அளிக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இதனை தொடர்ந்து மின்னணு வாக்கு இயந்திரத்துடன் இணைந்து விவிபேட் இயந்திரத்தில் உள்ள ஒப்புகைச் சீட்டை 100 சதவிகிதம் எண்ணக் கோரிய வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Recent Posts

நீங்கள் எட்டு வடிவ நடை பயிற்சி செய்பவரா? இதெல்லாம் அவசியம் தெரிஞ்சுக்கோங்க.!

8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…

5 mins ago

சுட்டெரிக்கும் வெப்பநிலை… அதிகரிக்கும் வெப்ப அலை… காரணம் என்ன.?

Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…

1 hour ago

என்னங்க சொல்லறீங்க? இது மட்டும் நடந்தா மும்பை ப்ளே ஆஃப் செல்லுமா?

Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…

2 hours ago

திடீரென பயங்கரமாக வெடித்து சிதறிய கல்குவாரி …விபத்து நடந்தது எப்படி.?

Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…

2 hours ago

அடேங்கப்பா.! ரத்த அழுத்தத்தை கூட குறைக்குமாம் தர்பூசணி விதைகள்.!

Watermelon seeds-தர்பூசணி விதைகளின் ஆரோக்கிய நன்மைகளை இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தர்பூசணியை சாப்பிட்டுவிட்டு அதன் விதைகளை தூக்கி எரிந்து விடுவோம். ஆனால் அந்த விதைகள்  நம்மில் பலரும்…

3 hours ago

ஸ்டார் படத்தை பார்த்துவிட்டு கவினுக்கு கால் செய்த சிம்பு! என்ன சொல்லிருக்காரு தெரியுமா?

STAR : ஸ்டார் படத்தை பார்த்துவிட்டு நடிகர் கவினுக்கு கால் செய்து சிம்பு பாராட்டியுள்ளார். நடிகர் கவின் டாடா திரைப்படத்தின் பெரிய வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக பியார்…

3 hours ago