திருமணத்திற்கு பிறகு இப்படி மாறிட்டாரு தொகுப்பாளினி ஐஸ்வர்யா.!

  • தொகுப்பாளினி ஐஸ்வர்யா ,நடிகர் சிவகார்த்திகேயன் உடன் ஜோடி நிகழ்ச்சியில் இணைந்து நடனமாடினார்.
  • திருமணத்திற்குப் பின் அதிக குண்டாகி மாறிவிட்ட அவர் மீண்டும் ஒல்லியாக மாறிவிட்டார். தற்போது அந்த புகைப்படத்தை தான் ஸ்டோரி பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தொகுப்பாளினி ஐஸ்வர்யா பிரபாகரன்  சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குடும்பம் அவார்ட்ஸ் என்ற விருது நிகழ்ச்சி மூலம் அறிமுகமானவர். பின்னர் சன் தொலைக்காட்சி பல்வேறு நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்தார்.

இதை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் இருந்தார். அப்போது நடிகர் சிவகார்த்திகேயன் உடன் ஜோடி நிகழ்ச்சியில் இணைந்து நடனமாடினார். இதை அடுத்து கடந்த 2015-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு இந்த ஒரு தொலைக்காட்சியிலும் வேலை செய்யவில்லை.

இந்நிலையில் ஐஸ்வர்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு உள்ளார்.அதில் திருமணத்திற்குப் பின் அதிக குண்டாகி மாறிவிட்ட அவர் மீண்டும் ஒல்லியாக மாறிவிட்டார். தற்போது அந்த புகைப்படத்தை தான் ஸ்டோரி பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது தீயாக பரவி வருகிறது.

author avatar
murugan