நாடு முழுவதும் விமான சேவைகள் ரத்து – விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் அறிவிப்பு

நாடு முழுவதும் மே 17 ஆம் தேதி வரை விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் வருகின்ற 3-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.எனவே நாளையுடன் ஊரடங்கு உத்தரவு முடிவடைய இருந்த நிலையில் மத்திய அரசு வருகின்ற மே -17ஆம் தேதி ஊரடங்கை நீட்டித்து உத்தரவு பிறப்பித்தது.இதில்  பச்சை, ஆரஞ்சு பகுதிகளுக்கு அதிகளவில் தளர்வுகளை அறிவித்தது மத்திய அரசு.

இந்நிலையில் நாடு முழுவதும் மே 17 ஆம் தேதி வரை விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது குறித்து விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,நாடு முழுவதும் உள்நாட்டு, வெளிநாட்டு விமான சேவைகள் ரத்து மே 17 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சரக்கு விமான போக்குவரத்து தொடர்ந்து நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.