சசிகலா வருகையால் அதிமுகவில் பாதிப்பு ஏற்படாது – ஜி.கே.வாசன் கருத்து

சசிகலாவின் வருகையால் அதிமுகவில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னை ஆழ்வார்பேட்டை தமிழ் மாநில காங்கிரஸ் அலுவலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஜிகே வாசன், தற்போது உள்ள நிலை அதிமுகவின் வெற்றியை உறுதி செய்துகொள்ளும் வகையில், தமிழகத்தில் பிரகாசமாக இருக்கிறது. பொதுமக்கள் அதிமுகவின் வளர்ச்சி திட்டங்களால் பயன் பெற்றிருக்கிறார்கள். அதிமுக ஆட்சியை ஏற்றுக்கொண்டுள்ளார்கள். எனவே, இது தொடரும் ஆட்சி மீண்டும் வெற்றி பெற்று வரும். சசிகலாவின் வருகையால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று தெரிவித்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்