அதிமுக அலுவலக மேலாளரிடம் சிபிசிஐடி விசாரணை!

அதிமுக தலைமை அலுவலக மேலாளர் மகாலிங்கத்திடம் சிபிசிசிடி போலீசார் விசாரணை. 

அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்டது தொடர்பாக மேலாளர் மகாலிங்கத்திடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஜூலை 11-ஆம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் வன்முறை தொடர்பாக சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகி மகாலிங்கம் விளக்கமளித்து வருகிறார்.

கடந்த ஜூலை 11-ம் தேதி அதிமுக தலைமை அலுவலகம் சூறையாடப்பட்டதாக கூறி அளித்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட 3 வழக்குகளை சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றி இருப்பதாக டி.ஜி.பி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, சிபிசிஐடி போலீசார் அதிமுக அலுவலக வன்முறை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது, அலுவலக மேலாளர் மகாலிங்கத்திடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment