அதிமுக பொதுச்செயலாளரான பின் ட்வீட்டர் பயோவை மாற்றிய ஈபிஎஸ்…!

எடப்பாடி பழனிசாமி அவர்கள், தனது ட்வீட்டர் பயோவை, அதிமுக பொதுச்செயலாளர் என மாற்றினார்.

அதிமுக பொதுச்செயலாளர் பதவியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதால் எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து, அதிமுக பொதுச்செயலாளராக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெற்றுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்திய பொள்ளாச்சி ஜெயராமன், நத்தம் விஸ்வநாதன்  அறிவித்துள்ளனர்.

பயோவை மாற்றினார் ஈபிஎஸ் 

இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி அவர்கள், அதிமுக தலைமை அலுவலகத்தில், மூத்த நிர்வாகிகள் முன்னிலையில் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றார். இதனையடுத்து, எடப்பாடி பழனிசாமி அவர்கள், தனது ட்வீட்டர் பயோவை, அதிமுக பொதுச்செயலாளர் என மாற்றினார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment