97 நாட்களுக்கு பிறகு மீண்டும்..! ஒரே நாளில் 300 க்கும் மேற்பட்ட கொரோனா வைரஸ் தொற்று..!

இந்தியாவில் 97 நாட்களுக்குப் பிறகு 300 க்கும் மேற்பட்ட புதிய கொரோனா வைரஸ் தொற்றுகள் பதிவாகியுள்ளன.

கடந்த 2020 ஆம் ஆண்டு உலக நாடுகள் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு தீவிரமாக பரவ தொடங்கிய நிலையில் கோடிக்கணக்கான மக்கள் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டனர். மேலும் லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர். தொற்று பாதிப்பை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாடுகளிலும் அந்தந்த நாட்டு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது.

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பலருக்கும் தடுப்பூசிகள் போடப்பட்டது. இந்த கட்டுப்பாடுகள் தற்பொழுது வரை நடைமுறையில் உள்ளது. இந்த கட்டுப்பாடுகளால் கொரோனா வைரஸ் தொற்று குறைந்து வந்த நிலையில் தற்பொழுது தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்தியாவில் 97 நாட்களுக்கு பிறகு ஒரே நாளில் 334 புதிய கொரோனா வைரஸ் தொற்றுகள் பதிவாகியுள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2,686 ஆக பதிவாகியுள்ளது. தொற்றினால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,30,775 ஆக உள்ளது. இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,41,54,035 ஆக பதிவாகியுள்ளது என்று  மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.

Leave a Comment