ராணி எலிசபெத் மறைவு… புதிய மன்னரானார் மூன்றாம் சார்லஸ்.! வரலாற்றில் இதுவே முதல்முறை.!

இங்கிலாந்து மன்னராக 73 வயதான 3ஆம் சார்லஸ் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் தான் அதிக வயதில் இங்கிலாந்து மன்னராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 

இங்கிலாந்தில் நீண்ட காலம் ராணியாக இருந்த இரண்டாம் எலிசபெத் நேற்று முன்தினம் காலமானார். இவருக்கு வயது 96. இவரது மறைவுக்கு பல நாட்டு தலைவர்கள் தங்கள் அஞ்சலியை செலுத்தினர். இங்கிலாந்தில் 10 நாட்கள் துக்க அனுசரிப்பு அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இங்கிலாந்து புதிய மன்னராக மூன்றாம் சார்லஸ் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். இவருக்கு வயது 73 ஆகும். இவர் தான் இங்கிலாந்தின் அதிக வயதில் மன்னராக பதவியேற்றவர் என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment