தனது தயார் ராணுவ பயிற்சி மேற்கொண்ட அதே பயிற்சி கூடத்தில் மகன் 27 வருடம் கழித்து பயிற்சி மேற்கொண்டார்.
சென்னை ராணுவ பயிற்சி கூடத்தில் 1995ஆம் ஆண்டு ஸ்மிதா சதுர்வேதி என்பவர் பயிற்சி பெற்று வெளியேறி , தற்போது அவர் ஓய்வுபெற்ற மேஜராக இருக்கிறார்.
அதே போல , அவரது மகன் தற்போது சென்னை ராணுவ பயிற்சி கூடத்தில் பயிற்சி முடித்து ராணுவத்தில் பணியாற்ற உள்ளார்.
இந்த புகைப்படங்களை பகிர்ந்த சென்னை, பாதுகாப்பு அமைச்சகத்தின் மக்கள் தொடர்பு டிவிட்டர் பதிவில்,
‘ பெண் அதிகாரிக்கு நெகிழ்ச்சிமிகு தருணம். மேஜர் ஸ்மிதா சதுர்வேதி (ஓய்வு), 1995ஆம் ஆண்டு பயிற்சி மேற்கொண்ட நிலையில், 27ஆண்டுகள் கழித்து அவரது மகன் அந்த ராணுவ பயிற்சியை முடித்துள்ளார்’ என பகிர்ந்துள்ளார்.
A rare euphoric moment for a Lady Officer:
Major Smita Chaturvedi (Retd) Commissioned from Officers Training Academy, Chennai before 27 years in 1995, saw her son getting Commissioned in the same manner in the same Academy today. @artrac_ia @SpokespersonMoD @DefenceMinIndia pic.twitter.com/hGRaAbQS0k— Defence PRO Chennai (@Def_PRO_Chennai) July 30, 2022