வாக்காளர் பட்டியலுடன் ஆதாரை இணைப்பதில் திமுகவுக்கு உடன்பாடு கிடையாது – ஆர்.எஸ்.பாரதி

வாக்காளர் பட்டியலுடன் ஆதிரை இணைப்பதில் திமுகவுக்கு உடன்பாடு கிடையாது ஆர்.எஸ்.பாரதி பேட்டி. 

தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு அவர்கள், இன்று தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் அட்டை இணைக்கும் பணி தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த கூட்டத்தில் திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி கலந்து கொண்டார். கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஆர்.எஸ்.பாரதி, வாக்காளர் பட்டியலுடன் ஆதிரை இணைப்பதில் திமுகவுக்கு உடன்பாடு கிடையாது. ஆதார் இல்லையெனில் பிற 12 ஆவணங்களை கொண்டு இணைக்கலாம் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

author avatar
Castro Murugan

Leave a Comment