அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம்.! 4வது ஆண்டில் அடியெடுத்து வைத்தார் முதல்வர்.!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் அதிமுக நிர்வாகிகளுடன் 4வது நாளாக இன்று ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் கட்சி வளர்ச்சி, மாநகராட்சி, நகராட்சி தேர்தல் குறித்து ராயப்பேட்டை அதிமுக தலைமையகத்தில் காலையிலும், மாலையிலும் என இரு நேரங்களில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் காலையில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில்  கோவை மாநகர், கோவை புறநகர், திருப்பூர் மாநகர், திருப்பூர் புறநகர், தேனி, அரியலூர், தர்மபுரி, ஆகிய 7 மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, தங்கமணி, கே.பி. அன்பழகன், உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இதனிடையே எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பதவியேற்று 3 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் இன்று 4-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார். இதை முன்னிட்டு தமிழக முதல்வருக்கு  அக்கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும், கட்சித் தொண்டர்கள் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்