அம்மா பேரவையில் இருந்து விலகும் அதிமுக எம்எல்ஏ! முதல்வரிடம் இறுதி முடிவு!

அதிமுக கட்சியின் ஒரு பகுதியாக செயல்பட்டு வரும் அம்மா பேரவையில் இணை செயலாளராக அதிமுகவை சேர்ந்த எம் எல் ஏ தோப்பு வெங்கடாச்சலம் பதவி வகித்து வந்தார்.இந்நிலையில் இன்று அந்த பொறுப்பில் இருந்து விலகுவதாக கூறி ராஜினாமை கடிதத்தை முதல்வரிடம் கொடுத்துள்ளார்.

தோப்பு வெங்கடாச்சலம் அதிமுக சார்பாக ஈரோடு பெருந்துறை சட்டமன்ற தொகுதியில் தொடர்ந்து இருமுறை எம்எல்ஏவாக இருந்து வருகிறார். இவர் அளித்த பேட்டியில், ‘ தனிப்பட்ட காரணங்களுக்காக அம்மா பேரவை பொறுப்பில் இருந்து விலக முதல்வரிடம் கடிதம் கொடுத்துள்ளேன் . இனி முடிவுகளை முதல்வரே எடுப்பார்’ என கூறினார்.

DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment