மே 23 அன்று வாக்கு எண்ணும் மையங்களில் உள்ளவர்கள் அதிக கவனத்துடன் செயல்பட வேண்டும்-மு.க.ஸ்டாலின்

மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் தமிழகத்தில் நடைபெற்று முடிந்துள்ளது.வருகின்ற 23-ஆம் தேதி இறுதி முடிவுகள் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை மைய முகவர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில்,கோவை, ராமநாதபுரம், கரூர், தேனியில் வெற்றிபெற அதிமுக – பாஜக கூட்டணி எந்த எல்லைக்கும் செல்லும். ஆளுங்கட்சி மற்றும் அதிகாரிகளின் மோசடித்தனங்கள் நடக்காத வகையில் கவனம் செலுத்த வேண்டும்.மே 23 அன்று வாக்கு எண்ணும் மையங்களில் உள்ள முகவர்கள் அதிக கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Comment