போலீஸ் அதிகாரியாக நடிகை வரலட்சுமி – மூன்று மொழிகளில் வெளியாகிறது ஆக்சன் திரைப்படம்!

போலீஸ் அதிகாரியாக நடிகை வரலட்சுமி நடித்துள்ள சேஸிங் எனும் ஆக்சன் திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளிவர உள்ளது.

இயக்குனர் கே வீரகுமார் அவர்கள் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் நடிகை வரலட்சுமி நடித்துள்ள புதிய திரைப்படம் தான் ஆக்சன். இந்த திரைப்படத்தில் வரலட்சுமி போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு தஷி இசையமைத்துள்ளார். ஏற்கனவே தமிழில் காட்டேரி, பாம்பன், பிறந்தநாள் பராசக்தி, கலர்ஸ், யானை, மற்றும் தெலுங்கில் நந்தி, கிராக் கன்னடத்தில் ரணம் என ஒன்பது படங்களில் தொடர்ச்சியாக நடித்து வரக்கூடிய வரலட்சுமி வீரக் குமார் இயக்கத்தில் சேஸிங் எனும் ஆக்சன் திரைப்படத்திலும் 3 மொழிகளில் நடித்து வருகிறார்.

ஹீரோயின் சப்ஜெக்ட் படமான வரலட்சுமியின் இந்த படத்தில் அதிரடியான சண்டை காட்சிகள் இருப்பதாகவும் இந்த படத்தில் அவர் டூப் போடாமல் நடித்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். படத்தில் மூன்று வில்லன்கள் உள்ளனராம். இவர் நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் சேஸிங் எனும் திரைப்படம் தமிழ், தெலுங்கு இந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளிவர உள்ளதால் 3 திரையுலக ரசிகர்களும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

author avatar
Rebekal