நடிகை மீரா மிதுனுக்கு நீதிமன்ற காவல்- நீதிமன்றம் உத்தரவு..!

நடிகை மீரா மிதுனுக்கு ஏப்ரல் 4-ம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. 

பட்டியலினத்தோர் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த வழக்கில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் வழக்கு பதிவு செய்து மீரா மிதுனை கைது செய்தனர். அதன் பின் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கில் ஜாமீனில் வெளியே வந்து பின்னர் விசாரணைக்கு முறையாக ஆஜராகவில்லை.

இதனால், விசாரணைக்கு ஆஜராகாததால் நடிகை மீரா மிதுனுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து மத்திய குற்றப்பிரிவு முதன்மை அமர்வு நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவிட்டது. இதற்கிடையில், நடிகை மீரா மிதுனை இன்று சென்னை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில், நடிகை மீரா மிதுனுக்கு ஏப்ரல் 4-ம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. 

 

author avatar
murugan