மாணவர்களின் வாழ்க்கையில் நடிகர் சூர்யா விளையாட வேண்டாம் – வானதி சீனிவாசன்

மாணவர்களின் வாழ்க்கையில் நடிகர் சூர்யா விளையாட வேண்டாம் என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் நீட் நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டது.இதற்கு இடையில் தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை நீட் தேர்வு பயத்தால் ஒரே நாளில் 3 மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து, நடிகர் சூர்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.அவரது அறிக்கையில்,நீட் தேர்வு பயத்தால் ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது மனசாட்சியை உலுக்கியது.கொரோனா அச்சத்தால் உயிருக்கு பயந்து வீடியோ கான்பிரன்ஸிங் மூலம் நீதி வழக்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் போய் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிடுகிறது” என்று கூறியிருந்தார்.சூர்யாவின் கருத்துக்கு ஆதரவாகவும் ,எதிராகவும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

 இந்நிலையில் தமிழக பாஜக துணை தலைவர் வானதி சீனிவாசன் கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்பொழுது அவர் கூறுகையில், திரைப்படங்களில் வசனம் பேசுவது போல மாணவர்களின் வாழ்க்கையில் நடிகர் சூர்யா விளையாட வேண்டாம். மாணவர்கள் தற்கொலையை தொடர்ந்து போட்டித் தேர்வுகளே நடத்த கூடாது என்கிற ரீதியில் சூர்யா பேசுகிறார் என்று தெரிவித்துள்ளார்.