#BREAKING: நடிகர் புனித் ராஜ்குமார் தனியார் மருத்துவமனையில் அனுமதி..!

நடிகர் புனித் ராஜ்குமார் பெங்களூருவிலுள்ள தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கன்னட சூப்பர் ஸ்டார் நடிகர் புனித் ராஜ்குமார் மாரடைப்பால் பெங்களூருவில் உள்ள விக்ரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது புனித் ராஜ்குமார் ஐசியூவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. புனித் ராஜ்குமார் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும், ஆனால் ரசிகர்கள் கவலைப்படத் தேவையில்லை என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

புனித் ராஜ்குமார் குடும்பத்தினர் விக்ரம் மருத்துவமனைக்கு விரைந்து வருகின்றனர்.  விக்ரம் மருத்துவமனைக்கு ரசிகர்கள் வருவதால் மருத்துவமனை முழுவதும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், புனித் ராஜ் குமாரின் வீட்டிற்கும் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

author avatar
murugan