தூத்துக்குடியில் நிவாரண பொருட்கள் வழங்கிய நடிகர் பிரசாந்த்!

தென் மாவட்டங்களில் கடந்த 17,18 ஆகிய தேதிகளில் பெய்த கனமழை காரணமாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்கள் பாதிக்கப்பட்டு வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழைநீர் புகுந்தது.

இந்திலையில், கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு நிவாரண உதவிகளை வழங்கி வரும் வேளையில், பல்வேறு அரசியல் கட்சியினரும், தன்னார்வளர்களும் தங்களால் இயன்ற உதவிகளை பாதிக்கப்பட்ட மக்களுக்கு அளித்து வருகின்றனர்.

சமீபத்தில், நடிகர் விஜய் தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் பொருட்கள் வழங்கினார். மேலும், தூதுக்குடில் டி.ராஜேந்தர் நிவாரணம் வழங்கினார். தற்பொழுது, நடிகர் பிரசாந்த் வழங்கியிருக்கிறார்.

வெள்ள நிவாரணம்: நடிகர் விஜய் நிவாரண உதவி வழங்கும் நிகழ்வில் நடந்த சுவாரஸ்ய சம்பவங்கள்.!

நடிகர் பிரசாந்த் இன்று தூத்துக்குடி, திருநெல்வேலியில் மழையால் பாதிக்கப்பட்ட 1,000 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும், இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியை சேர்ந்த டாப் ஸ்டார் பிரஷாந்த் ரசிகர் நற்பணி மன்றம், இந்த நிவாரணம் பொருட்கள் கொடுப்பதற்கு உதவி செய்ததாக கூறப்படுகிறது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.